தாய்மை அனுபவம் 18


    


    இன்று நம் செல்ல குட்டிக்கு ஒரு வயது ஆக போகிறது. கொண்டாட்டம் குதுகலம் தான்.




   
    

    வயிற்றின் உள் பிஞ்சு கால்களால் உதைத்து,பிறந்த பின்பு மழலையாக ஆனந்த அழுகை அழுது,அதன் பிஞ்சு கைகளால் நாம் வருடி வளர்க்கும் நம் குட்டி செல்லத்திற்க்கு அதற்க்குள் ஒரு வயது!

    வெறும் ஒரிரு வார்த்தைகள் மட்டுமே சொன்ன நம் செல்லம் தொடராக பேச ஆரம்பிக்கும் நேரம் இது. "அம்மா வா"  "போலாம் அங்க" இப்படி சொல்லும். அப்படி சொல்லும், போதே நாம் மரியாதையாக பேச சொல்லிக்கொடுக்க வேண்டும். முதலிலேயே சொல்லிக்கொடுத்தால் பிள்ளைகள் சுலபமாக கற்றுக்கொள்வார்கள்.

    நாமும் வீட்டில் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். திட்டும் வார்த்தைகள் சொன்னால் அது நமக்கே திரும்பி வரும்.

    இந்த வயதில் பிள்ளைகளின் தூக்கம் பொதுவாக முன்பை விட குறைவாகவே இருக்கும். இரவு தூக்கம் 11 லிருந்து 12 மணி நேரம் தூங்கினால் போதும்
    
     மதிய நேரம் ஏறியது 1 மணி நேரம் தூங்கினால் போதும். மதிய நேரம் அதிகம் தூங்கினால் இரவு தூங்குவது கஷ்டம். பிறகு, காலை எழுவது கஷ்டம்.

     நாம் பெரும்பாலும் பிள்ளைகளை மதியம் வெகு நேரம் தூங்க வைப்பதையே பார்க்கிறோம்.

இது நான் எல்லாரையும் சொல்லவில்லைஇது மாதிரியும் நடக்கிறது என்றுதான் கூறுகிறேன்

1)வேலைக்கு போகாத பெண்கள் தானும் தூங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அல்லது டி.வி பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

2)வேலைக்கு போகும் பெண்கள் யாரிடமாவது விட்டு விட்டு போகும் நிற்பந்தம் ஏற்படுகிறது. அங்கு அதிகமான பிள்ளைகள் இருப்பதால், பிள்ளைகளை தூங்க வைத்து விடுகிறார்கள்.

3)க்ரேஷ்ஷில் விட்டு சென்றால் காலையிலிருந்து மாலை வரை அங்கு இருந்த கலைப்பு பிள்ளை வந்ததும் வீட்டில் தூங்கி  விடும்.

    பிறகு எழுப்பி சாப்பாடு கொடுத்து திரும்ப படுக்க வைத்தால் எப்படி தூங்கும்?

    அதனால் தான் தூக்கம் இந்த வயதில் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூறிவிட்டேன்.

     இந்த வயதில் காலை ஊன்றி நன்றாக நடக்க ஆரம்பிப்பார்கள். தனியாகதான். எதற்க்கும் நீங்கள் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    அதற்க்காக லேசாக விழுவதுப்போல் இருந்தால், ஐய்யயோ என்று இருக்கும் எல்லா சாமியையும் கூப்பிட்டு கூப்பாடு போடும் என் அம்மாச்சியை போல் இருக்கக்கூடாது.

     அப்படி செய்தால் அது செய்யும் செய்யல் தடைப்படும். செய்ய விடுங்கள். தவறு செய்தால்தான்  திருந்துவார்கள்.

    அது நடக்கும் போது அதன் கால்களை நன்றாக பாருங்கள். பாதம் எப்படி ஊன்றுகிறது என்று.

   சில பிள்ளைகள், கால்லின் (சுண்டு விரல் பக்கம் உள்ள )பாதம் மிகவும் ஊன்றி நடப்பார்கள். அதனால், அவர்களின் பாதம் எதிர் பக்கம் (கட்டை விரல் பக்கம்) எல்லோருக்கும் இருப்பதுபோல் வலைவு இல்லாமல் இருக்கும். இது பாதம் தட்டையாக இருக்கும்.

    தட்டை பாதம் உடலுக்கு நல்லது கிடையாது. இது ஆரம்பதிலேயே கவனித்து விட வேண்டும். அதற்க்காக காலணிகள், மருத்துவம் எல்லாம் இருக்கிறது. இல்லை என்றால் பின்னாலில் அது மிகவும் பாதிக்கும். நடை மாறும். கால் வலி அதிகம் ஆகும். மீண்டும் கவனிக்கமால் விட்டால், கால் முட்டி கீழே இறங்க தொடங்கி விடும். பிறகு, இடுப்பு எலும்பும் இறங்க ஆரம்பிக்கும். நாள் போகபோக நடையே போனாலும் ஆச்சிரியப்பட தேவையில்லை. அதனால் வரும் முன் காப்போம்.

     அது போலவே, கண் பார்வையையும் நாம் சோதிக்க வேண்டும்.
காது கேட்கிறதா என்று நாமே சோதிக்க வேண்டும்.

     சில பிள்ளைகள் 2 வயது வரைக்கூட பேசாது அதனால் அது ஊமைக்கிடையாது. சில வார்த்தைகள் பேசுகிறதா? என்று பாருங்கள்.

     விளையாடும் போதுக்கூட பிள்ளைகள் மண்,கல்லில் விளையாட கூடாது என் பிள்ளை அழுக்கு என்று கூறுகிறார்கள். அது தப்பு; அந்த பிள்ளைக்கு எப்படி தெரிவது இது கல்,மண் என்று? இதில் விளையாடினால் அழுக்கு நமக்கு வரும் என்று?

     தண்ணீர் எதற்க்கு இருக்கிறது? குளியல் அறை எதற்க்கு இருக்கிறது?

     எனக்கு என்னவோ நம் நாட்டில் தான் இப்படி எல்லாம் பார்ப்பதாக நினைக்கிறேன்

     இங்கு பெற்றோர்கள் இயற்க்கையுடன் ஒன்றித்து இருக்க சொல்கிறார்கள்.

       பிள்ளைகள் மண்ணை முகத்தில் பூசிக்கொண்டால் புகைப்படம் பிடிக்கிறார்கள். அதுவே சாக்லெட்,ஜாம்மை முகத்தில் பூசிக்கொண்டாலும் உடல் எங்கிலும் தான் அப்போதும் புகைப்படம்தான்.

நாம் மட்டும் ஏன் பிள்ளைகளை ரசிப்பது இல்லை?.

     யோசித்து பாருங்கள். இந்த வயதில் தான் இதுமாதிரி செய்தால் ரசித்து சிரிக்க முடியும். அதுவே, நீங்களும், நானும் செய்வோமா? அப்படியே செய்தால் பைத்தியம் என்று சொல்லி சிரிப்பார்கள். அது வேறு மாதிரியான சிரிப்பு அல்லவா?

இனியாவது பிள்ளைகளை ரசிபீர்களா?.

     பார்க் போன்ற இடங்களில் விளையாடும் போது எல்லாருடனும் விளையாட அனுமதியுங்கள். மனிதர்களுக்குள் ஏற்றதாழ்வு பார்த்து பழக சொல்லிதராதீர்கள். அவர்கள் இந்த உலகத்தில் தான் வாழ போகிறார்கள். ஏழை பணக்கார் எல்லாரும் இருக்க போகிறார்கள். கெட்டவர்கள், நல்லவர்கள். எல்லாரும் இருக்க போகிறார்கள்
     
     நீங்கள் எல்லா இடங்களுக்கும் அவர்களுடனே போய்க்கொண்டே இருக்க முடியாது.

     மீண்டும் சொல்கிறேன். பிள்ளைகளுடன் நாம் இருப்பது சிறிது காலம் தான் அதற்க்குள் நாம் நம்மால் முடிந்த உலக அனுபவங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்

      ஏட்டு சுரக்காய்யும், நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே வேலைக்கு உதவாது. மனிதர்களுடன் வாழ சொல்லிக்கொடுங்கள். அதுதான் வாழ்க்கையின் ரகசியம். பணம் பதவிகள் கிடையாது. அமைதியான வாழ்க்கையின் ரகசியம். மனித அன்பு. அதனை சொல்லிக்கொடுங்கள்.

     சின்ன பிள்ளைகளாக இருக்கும் போதே எல்லாருடனும் பழக விடுங்கள். அப்போதுதான் நல்லது எது? கெட்டது எது என்று எடுத்து சொல்லலாம்
மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதால் விட்டுக்கொடுக்கும் பழக்கம் வரும்.

      பழைய விளையாட்டுகளும் சொல்லிக்கொடுங்கள்.கண்ணாமூச்சி, உருப்புட்டான் திருப்புட்டான் இது எல்லாம் மறந்து போன விளையாட்டுகள் தான். இதில் பிள்ளைகள் ஒரே இடத்தில் உட்காரும். பகிர்ந்தும் கொடுக்கும் பழக்கமும் வரும்.

உருப்பட்டான் திருப்பட்டான்
ஒடியா மங்களம்
மாடும் கன்னும்
வர வேலை மஞ்சா தண்ணீ
குடிகிற வேல
கால மடக்குடி காமச்சி
கைய மடக்குடி மீனாச்சி


தலையில என்ன?
வைக்க கட்டு.
 இறக்கி போடு
நெத்தியில என்ன?
வாக்கு சுட்டி.
எடுத்து போடு.
கழுத்துல என்ன?
சங்கிலி.
கழட்டி போடு.
இடிப்புல என்ன?
ஒட்டியானம்.
கழட்டி போடு.
கையில என்ன?
வளையல். உருவி போடு.
காலில என்ன?
கொலுசு.

கழட்டி போடு.



பப்பு கடம்மா
பப்பு கட
பப்பு கடம்மா
பப்பு கட
பப்பு,சோறு,ரசம்,பொரியல்,கூட்டு
எல்லாத்தையும் பெசஞ்ஞி
பாப்பாவுக்கு ஒரு வாயி
அம்மாவுக்கு ஒரு வாயி
அப்பாவுக்கு ஒரு வாயி
தாத்தாவுக்கு ஒரு வாயி
அம்மாச்சிக்கு ஒரு வாயி
அக்காவுக்கு ஒரு வாயி
டி.விக்கு ஒரு வாயி
நாக்காலிக்கு ஒரு வாயி

நண்டு வருது  நரி வருது



மீண்டும் பேசுவேன்
copyrightApr2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts