தாய்மை அனுபவம் 1
என் கண்ணின்மணிகளை
என் கண்ணுக்குள் - விழித்திரையாய்
காக்கும் இமைகளாய்
காத்த, காக்கும் கலை இதுவே.
இது என்னைப்போல் தனியாக எதுவும் தெரியாமல்,
முதல் முதலாக குழந்தை பெறுபவருக்கு உதவலாம்.
இதுவும் என் அனுபவக்குறிப்பு.
அதைப்பற்றி பேசலாம் வாங்க.குழந்தை வளர்ப்பது
என்பது என்னை பொறுத்தவரை பெறுவதைவிட மிகமிக
பொறுப்பான ஒரு வேலை.
அந்த நாள் பாடல் ஒன்று சொல்லி வைத்தார்கள்.
பிள்ளையை பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?
குழந்தை வளர்ப்பை நாம் அநுபவித்து செய்ய வேண்டும்.
பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவும், மழலை பேச்சும்
சுகம்,சுகம்,சுகமே.
குழந்தைகள் வளர்பருவம் எல்லாமே பிரித்து சொல்கிறேன்.
பிள்ளை உருவன நாள் முதல் தொடங்கி விடுகிறது. நமது
கடமை, பொறுமை, பொறுப்பு , jolly….
அதனால் நான் இந்த நாட்களை பி.மு என்றும்
பி.பி என்றும் பிரிக்கிறேன். புரிந்தால் சரி.
புரியாதவர்கள் : பிள்ளை பிறப்பதற்கு முன் (பி.மு),
பிள்ளை பிறப்பிற்கு பின் (பி.பி).
இப்பொழுது பி.மு. பார்போம்.
.1) கூடுமானவரை நம்மால் முடிந்த வரை வேலை செய்ய
வேண்டும். அதற்காக over ராகவும் வேண்டாம்.
முடியவில்லை, முடியவில்லை என்று முயற்சி
செய்யமலே சொல்லுவார்கள். இப்படியும் இருப்பது
நல்லது அல்ல. அளவோடு வேலைகளை செய்யலாம்.
2) வாந்தி எடுப்பது எல்லாம் நம் உடம்பை பொருத்தது.
எனக்கு 2 பெண்கள், 1 ஆண் மூன்று பேர் பிறந்த போதும்
வாந்தி, மயக்கம் எல்லாம் இருத்தது. அதனால், இந்த
2 வைத்தெல்லாம் என்ன பிள்ளை? என்று செல்ல முடியாது.
3) குங்குமப்பூவிற்க்கும் பிள்ளையின் நிறதிற்கும் எந்த
சம்மந்தமும் இல்லை. அது நமது டி.என்.ஏ. சம்மந்த பட்டது.
குங்குமப்பூ உடப்பிற்கு நல்லது. அதுவும் அதிகம் கூடாது,
உடபிற்கு சூடு.
4) நிறைய கீரை வகைகள், காய்கறிகள், மீன்கள், முட் டை,
பழங்கள் சாப்பிடுங்கள்.
5) நீங்களாகவே எந்த மாத்திரைகளையும் சாப்பிடாதீர்கள்.
டாக்டரிடம் ஆலோசனை செய்து எந்த மருந்தையும்
எடுத்துக்கொள்ளவும்.
6) தினமும் நடப்பது நல்லது. இது மனதுக்கும் நல்லது.
நல்ல விதமாக பிரசவிப்பதற்கும் நல்லது.
உடகார்ந்துக்கொண்டே இருந்து விட்டு, கடைசியில் operation
என்று புலம்புவதை விட, தினமும் நடக்கலாம்.
7)கூடுமான வரையில் சுகப்பிரசவத்தில் Péridurale(Epidural) போட்டுக்கொள்வதை தவிர்கலாம். அது, பின் வரும்
காலங்களில் முதுகுவலி வருகிறது என்கிறார்கள்.
8) கீழே உட்கார்ந்து எழுவது நல்லது.
தயவு செய்து பிரயாணம் செய்வது வேண்டாம்.
தயவு செய்து அழுகையும் வேண்டாம்.
இது போதும் இப்போதைக்கு. இன்னும் எழுதுவேன்.
copyright© Dec 2013kolly2wood.blogspot.com
Comments
Post a Comment