தாய்மை அனுபவம் 29





     நம் குழந்தை, குழந்தை பருவதிற்கு கொஞ்சம் கொஞ்சமாக் விடைக்கொடுக்கும் நேரம் இது. 6 வயது ஆகி விட்டது அல்லவா?

     1 வயது முதல் 8 வயது வரை - பேதை இது பெண்குழந்தை, பாலன் இது ஆண் குழந்தைகளின் பருவ பெயர்கள்.

     இதுவரை இல்லாத மாற்றங்கள் துளிர் விட ஆரம்பிக்கும் வயது.
இந்த வயது பிள்ளைகள் கற்பனை உலகில் மிதக்க ஆரம்பிக்கும் வயது.
நிறைய நிறைய கற்பனை கதைகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்

      சின்ன சின்ன கை,கால்களை வைத்துக்கொண்டு அபிநயம் பிடித்து தங்கள் கற்பனைகளை கொட்டும் போது மிகவும் சிரிப்பாகவும்,ஆச்சிரியமாகவும் இருக்கும்.

      ஏதாவது தப்பு செய்தால் அதனை மறைக்க நிறைய பொய் சொல்ல தொடங்கும் நாள். இதனை ரசிப்பதுப்போல் திட்டாமல் அழகாக திருத்தி விடுங்கள். கோபமாகவும் அடித்தும் சொன்னால், அது பல சமையங்களில் பாதமாக அமையலாம்.

  

     சில சமயங்களில் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பும் போது அடுத்த பிள்ளையின் பென்சில்,ஸ்கேல் போன்ற ஏதாவது தவறுதலாகவோ, இது அழகாக இருக்கிறது என்று வீட்டுக்கு எடுத்து வரலாம். இது பல சமயங்களில் நடப்பதுத்தான்.

      இதையும் அன்பாக எடுத்து சொல்ல வேண்டும். இது நம் பொருள் கிடையாது என்றும், மற்றவர்களின் பொருளுக்கு நாம் ஆசைப்படுவது கூடாது. உனக்குதான் நான் அழகான பென்சில் வாங்கிக்கொடுத்து இருக்கிறேன். உன்னுடையது அழக்காக இருக்கும் அளவு நீ எடுத்து வந்த பொருள் நல்லவே இல்லை. எப்போதும் உன் பொருள்தான் நன்றாக, அழகாக இருக்கிறது என்று 
    
    உங்கள் பிள்ளைகளின் குணத்திற்கு ஏற்ப சொல்லிக்கொடுங்கள்.
எதையும் நாம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வதில் தான் இருக்கிறது.
பிள்ளைகள் அவர்கள் போக்கில் விடாமல், அவர்களின் போக்கில் விடுவதைப்போல் திருத்திவிடவேண்டும்.




     இந்த வயதில் 2 சக்கர சைக்கில் ஓட்ட ஆரம்பிக்கும் வயது. நிறைய உடல் பயிற்சி செய்யும் விதமாக செய்யுங்கள்.

     நல்லது நிறைய சொல்லிக்கொடுக்கும் வயது. குழந்தைகளின் பிடிவாதத்தை அன்பால் திருத்தும் வயது. இந்த வயதில் பிள்ளைகளுக்கு நிறைய உலக அறிவை வளர்க்க வேண்டும்.

     படிக்க ஆரம்பிக்கும் வயது அடுத்த பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அது அவர்களின் மனதை பாதிக்கும். நன்றாக படிக்கும் பிள்ளை உங்களுக்கு இருந்தால்,அதனை குறைவாக படிக்கும் பிள்ளைகளுடன் பழகாமல் இரு என்று தடை போடதீர்கள்.

     படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு முதலிடம் வாகிக்காது. நல்ல குணங்களும், அடுத்தவர்களின் நலன்களில் பங்கு பெறவும்,எல்லோரிடமும் அன்பாக பழகுவது தான் உலகத்தில் வாழ  பழகும் நல்ல பண்பு.

     கல்வி அறிவை வளர்க்கவும் உதவும். கல்வி என்று சொல்லும் போது நான் இங்கு சொல்ல ஆசைபடுவது ஒன்று உள்ளது.

     பிள்ளைகள் மதிப்பெண் வாங்குவதே குறியாக படிக்க வைக்க வேண்டாம்.

      மதிப்பெண் வாங்காமல் இருந்தால் அதற்காக திட்ட வேண்டாம்."இந்த முறை போகட்டும்.அடுத்த முறைப்பார் எவ்வளவு அழகாக மதிப்பெண் வாங்க போகிறாய் பார்".

     "நீ எவ்வளவு புத்திசாலி, உனக்கு என்ன என்ன நிறைய தெரிகிறது? இது ஒன்றும் கிடையாது. உனக்கு படித்தால் வரும் பார். என் புத்திசாலி பிள்ளை நீ" என்று உற்சகம் கொடுங்கள்;

     நன்றாக படிக்கும் பிள்ளைகள் என்றால், அவர்களுக்கு மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அதற்கு திமிரை வளர்க்க வேண்டாம்.

     ஊக்கத்தை அவர்களுக்கும் கொடுங்கள். ஏதாவது பரிசுப்பொருள் கொடுத்து ஊக்கம் கொடுங்கள்.

     உங்களுக்கு ஒரு பிள்ளைக்கு மேல் இருந்தால், ஒரு பிள்ளை நன்றாக படித்து, இன்னொரு பிள்ளை படிக்க வில்லை என்றால்,படிக்காத பிள்ளையை புகழ்ந்து தள்ளிவிட்டு. படிக்காத பிள்ளையை எப்பொழுதும் திட்டி தீர்காதீர்கள்.

     சிலர் இருக்கிறார்கள் படிக்கும் பிள்ளையை  விட்டு விட்டு, படிக்காத பிள்ளைக்கு ஊக்கம் கொடுக்கும் பேர்வழி என்று படிக்காத குழந்தைக்கு அதிகமாக இடம் கொடுத்து கெடுத்து குட்டிசுவராகி விடுவார்கள்.

     இவ்வாறு செய்வதனால், நீங்கள் அதிகமாக செல்லம் கொடுக்கும்  பிள்ளையின் பிடிவாதம் அதிகமாக  இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் பிளவு சின்னவயதிலிருந்தே வேர் விட நீங்களே வழி காட்டாதீர்கள்.
நல்வழிப்படுத்துவதும்,, உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வைப்பதும் பெரியவர்களின் கடமை.

    தாத்தா,பாட்டியுடன் இருக்கும் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டிகள் நல்ல கதைகள், நல்ல பாடல்கள் எல்லாம் சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகளிடம் அவர்களின் பெற்றோரைப்பற்றி குறை சொல்லாதீர்கள்.

     குடும்பத்தினர் யாரையும் குழந்தைகளிடம் பெற்றோராக இருந்தாலும் பெற்றோரின் பெற்றோரின் பெற்றோர்களாக இருந்தாலும், குறை சொல்லாதீர்கள். உங்களுக்கு குடும்பத்தினர்களுடன் மன வருத்தம் இருக்கலாம். ஆனால்,அந்த பிஞ்சி உள்ளங்களிலும் பகையை வளர்க்காதீர்கள்.

    அவர்களுக்கும் உங்கள் பகைவர்களுக்கும் ஒரு விரோதமும் கிடையாது. அதனால், அவர்களை வெறுக்க வைக்காதீர்கள்.

     உற்றோர்கள் உண்மையாகவே கெட்டது நினைக்கிறார்கள் என்றால், அவர்களிடமிருந்து விலகிவிடுங்கள். உங்கள பிள்ளைகளையும் அவர்கள் வெறுகிறார்கள் என்றாலும் உங்கள் குடும்பத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்றாலும் அவர்களிடமிருந்து விலகியிருங்கள்.

     பிள்ளைகளுக்கு தானாக உடை மாற்றவும், தங்கள் வேலைகளை தானாக செய்யவும் சொல்லிக்கொடுஙகள்.

     இந்த வயதில் பிள்ளைகளுக்கு குறைந்தது  10 மணிநேரமாவது தூங்கவேண்டும்.

     இந்த வயதில் பயம் அதிகமாக வரும். கெட்ட கனவுகள் வந்து பயப்படுவார்கள். அவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள். இருட்டை கண்டால் மிகவும் பயம் வரும், அதனால் சின்ன விளக்கு ஒன்று போட்டு வையுங்கள். நல்ல தைரியம் வரவழைக்குமாறு கதைகள் சொல்லுங்கள்.

      பெற்றோர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மொழிகள் பேசுபவராக இருந்தால், இரண்டு மொழிகளையும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். ஒருவர்மொழியை ஒருவர் இழிவாக பேசாதீர்கள்.



     
      இரண்டு மொழிகளும் பிள்ளைகளுக்கு முக்கியம். பல மொழிகள் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்க்கும் பிள்ளைகள் மிகவும் குறைவு.
அந்த வாய்ப்பு உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் போது ஏன் தடை செய்ய வேண்டும்

    இரண்டு மொழிகளுக்கு மேல் பேசும் பிள்ளைகளுக்கு அறிவு ஆற்றல் மிகவும் நன்றாக இருக்கும்.

      அதுப்போலவே இரண்டு கலாச்சாரம் கொண்டு இருக்கும் தம்பதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டு கலாச்சாரத்தையும் கற்றுக்கொடுங்கள். பிள்ளைகள் சீக்கிரமாக எல்லாம் கற்றுக்கொள்வர்கள். நமக்குதான் மனம் ஒத்துழைக்க தயங்கும்

     உங்கள் பிள்ளையின் வளர்த்தி ஜெனரெஷனை பொருத்தது. அதற்க்காக அதன் உடல் நலத்தையும் பொருத்தது. கண்ட மருந்தையும் கொடுக்காதீர்கள்.

      நல்ல ஊட்டமான சாப்பாடே போதுமானது.

      மூன்று வேலை சாப்பாடும், பள்ளி விட்டு வந்ததும் ஏதாவது சாப்பிட வைப்பதும் போதுமானது. காலையில் சாப்பிடாமல் பிள்ளைகள் பள்ளிக்கு போனால், அப்பொழுது 10 மணிக்கு ஏதாவது சாப்பிட கொடுத்து அனுப்புங்கள்.

     காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டால் 10 மணிக்கு எதுவும் கொடுத்து அனுப்ப தேவையில்லை.

பொதுவாக 6 வயது பிள்ளைகளின் உயரம்:

பெண் பிள்ளைஎன்றால் 112cm
ஆண்பிள்ளை என்றால் 115cm

பொதுவாக 6 வயது பிள்ளைகளின் எடை:

பெண் பிள்ளைஎன்றால் 19 கிலோ
ஆண்பிள்ளை என்றால் 20 கிலோ

      இது பொதுவாகதான் எழுதி இருக்கிறேன். பிறகு ஒவ்வொரு குழந்தைகளை பொறுத்தது.

         இந்த வயதில் நன்றாக சத்தான சாப்பாடாக கொடுங்கள்கூடவே 
உடல் பயிற்சியுடைய விளையாட்டுகள் சொல்லிக்கொடுங்கள்இல்லை 
என்றால்,உடல் பருமன் வர வாய்ப்பு இருக்கிறது.

      எப்போதும் குழந்தை கேட்கிறது என்று கண்ட உணவுகளையும் 
அவர்களுக்கு வாங்கிக்கொடுக்க கூடாது.

    நிறைய மிட்டாய்,சிப்ஸ்,ஐஸ்கிரீம்சாக்லெட் என்று கடையில் விற்கிறது 
என்று வாங்கிக்கொடுக்காதீர்கள்வாயில் சொத்தைப்பல் வந்து கஷ்டப்பட போவது குழந்தைகள் தான்.

     ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிட்டு தொண்டை வீணாகி விடும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அல்லவாகொஞ்சமாக 
வாங்கிக்கொடுங்கள்.

     இந்த வயதில் பிள்ளைகளுக்கு நிறைய காய்கறிகளும் பழவகைகளும் கொடுங்கள்.

      கறி மீன் சாப்பிடுவர்களானால், வாரத்திற்கு 3,4 நாள்களுக்கு ஒருமுறை மாற்றி  மாற்றி செய்துக்கொடுங்கள். 

     அதாவது மீன் ஒருநாளைக்கு என்றால்,கறி ஒருநாளைக்கு,முட்டை ஒருநாளைக்கு என்று கொடுங்கள். கூடவே காய்கறிகள் நிறைய இருக்க வேண்டும்.

       பால் சம்மந்த பட்ட பொருள்கள் தினமும் 2 மூன்று முறை கொடுங்கள்.

    ஓட்ஸ்,கம்பு,கேழ்வரகு நிறைய கொடுங்கள்.

     உப்பையும் எண்ணெய் பொருட்களையும் குறைத்துக்கொடுங்கள். சர்க்கரையும் குறைவாக இருந்தால் நல்லது.

     சோடா பானங்களை தவிர்க்கவும்.




     

மத்திய உணவு,இரவு உணவு சாப்பிடும் போது சர்க்கரை போட்ட பானங்கள் கொடுக்க வேண்டாம்.

      நிறைய சிப்ஸ் சாப்பிட விடாதீர்கள். அந்த ருசி கண்டுவிட்டால் போதை பொருள் போல் வந்துவிடும். சாப்பாட்டு மேல் வெறுப்பு வந்துவிடும்.

      நிறைய தண்ணீர் கொடுங்கள். டீ,காபி கொடுப்பதை தவிர்த்தால் நல்லது.எதுவுமே எப்போதாவது ஒருமுறை கொடுத்தால் நல்லது.


மீண்டும் வளரும்
CopyrightJan2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts